இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் சற்று முன் யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார்.
முதலமைச்சர் அலுவலகத்திற்கு காலை 10 மணிக்கு வருகை தந்த ஆணையாளருடன் முதலமைச்சர், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அத்துடன், முதலமைச்சர் அலுவலகம் முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் நின்றிருந்த நிலையில் அவர்களை ஆணையாளர் சந்தித்துள்ளார்.
-http://www.tamilwin.com