கடலில் படகு கவிழ்ந்ததில் 35 அகதிகள் பலி: துருக்கி அருகே சோகம்

turkey_mig_001துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு செல்லும் போது படகு கவிழ்ந்ததால் 33 அகதிகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக துருக்கி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,  துருக்கியில் இருந்து கீரீஸ் நாட்டுக்கு செல்ல முயன்ற போது லெஸ்போஸ் தீவு அருகே படகு கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோன்று துருக்கியின் இஸ்மீர் மாகாணம் அருகே மற்றொரு படகு கவிழ்ந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 5ம் திகதி வரை இந்த ஆண்டில் 374 பேர் ஐரோப்பாவுக்கு பயணம் செய்ய முயன்றபோது பலியாகியுள்ளதாக சர்வதேச புலம்பெயர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதில் பெரும்பாலானோர் கிரீஸ் வழியாக செல்லும் போது பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com