மந்திர சக்தியால் தங்க நெக்லஸ் வரவழைத்த மந்திரவாதி ஆச்சரியத்தில் மக்கள்

Necklaceமராட்டிய மாநிலம் புனேயில் கல்வி நிறுவன விருது வழங்கும் விழா நடந்தது. இதில் சாமியார் குருவானந்த் சுவாமி கலந்து கொண்டு அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

விழாவில் கலந்து கொண்ட மராட்டிய முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா மேடை ஏறி சாமியாரிடம் ஆசி பெறச் சென்றார். அப்போது சாமியார் திடீர் என்று தங்க நெக்லஸ் ஒன்றை கையில் வரவழைத்து அம்ருதாவிடம் கொடுத்தார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து ஆச்சரியமும் வியப்பும் அடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு மராட்டிய மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்க தலைவர அவினாஷ் பட்டேல் கண்டனம் தெரிவித்தார். ‘‘முதல்–மந்திரி இதுபற்றி விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த சாமியாரை எனது கட்டுப்பாட்டில் வைத்து இதுபோல் நெக்லஸ் வரவழைத்து கொடுத்தால் அவருக்கு ரூ.21 லட்சம் பரிசு தருகிறேன்’’ என்றும் சவால் விடுத்தார்.

முதல்–மந்திரி மனைவி அம்ருதா கூறுகையில் சாமியாரிடம் ஆசி பெறவே சென்றேன். அவர் நெக்லஸ் வரவழைத்து கொடுத்ததை நம்ப முடியவில்லை’’ என்றார்.

-http://www.athirvu.com

TAGS: