முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் எதிரணியினரும் அம்னோவில் உள்ள கிளர்ச்ச்சிக்காரர்களும் பொது எதிரிகளான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அப்பாண்டி அலி ஆகியோருக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
“நஜிப்புக்கும் அபாண்டிக்கும் எதிராக அதிகமாக எதையும் செய்ய முடியாது, அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதைத் தவிர.
“அடுத்த தேர்தலுக்காகக் காத்திருக்கும்வரை எதிரணியினரும் அம்னோ கிளர்ச்சிக்காரர்களும் ஒன்றுபட்டு நஜிப்பையும் அபாண்டியையும் எதிர்ப்பது பற்றி ஏன் திட்டமிடக்கூடாது?
“நஜிப் அகற்றப்பட வேண்டிய ஒரு புற்றுநோய் என்ற கருத்தைக் கொண்டுள்ள தேசிய தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அகண்ட கூட்டணியை அமைக்க வேண்டும். அதுதான் இப்போதைய தேவை”, என்று சைட் அவரது வலைப்பதிவில் பதிவிட்டிருந்தார்.
நாட்டைப் பாதுகாக்கும் தேசிய ஒற்றுமை மன்றம் அமைக்க தலைவர்களின் உச்சநிலைக் கூட்டமொன்று கூட்டப்பட வேண்டும் என்றாரவர்.