புலிகளின் ராதா வான்காப்பு சிறப்புப் படையணி வசந்தரூபனின் நிலை இது தான் !

எமக்காக உயிர் வாழ்ந்தவர்களுக்காக நாம் என்ன செயதோம்….. ? கடவுள்களுக்கு கொடுப்பதை விட இவர்களுக்கு உதவி செய்து பாருங்கள். நீங்களும் கடவுளாக மாறுவீர்கள். என்று சொல்லி தான் ஆரம்பிக்கவேண்டும். இனியாவது ஆடம்பரமாக பிறந்த நாளை கொண்டாடுவதை தவிர்த்து. அல்லது அதன் செலவில் ஒரு பகுதியை மிச்சம் பிடித்து இவர்கள் போன்றவர்களுக்கு உதவிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கைக்கு நிம்மதி கிடைக்கும் !

விடுதலைப்புலிகளின் ராதா வான்காப்பு சிறப்புப் படையணியில் இருந்து, முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் 2009ம் ஆண்டு 4ம்மாதம் முள்ளந்தண்டில் ஏற்பட்ட துப்பாக்கிசூட்டு காயத்தினால் இடுப்பிற்கு கீழே இயங்க முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் வசந்த ரூபன். இவருடைய தாயார் சித்திரவேல் பூமணி (71) மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் தனது மகனை பராமரித்து வருகின்றார். கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், தாயாரை நாம் பராமரிக்கவேண்டிய தருணத்தில். அவர் எங்களை பராமரிக்கும் நிலை வருவது தான்.

ஏழு வருடங்களாக அடிப்படை வசதிகள் அற்ற நிலையின் காரணமாக படுத்த படுக்கையில் இருத்த வசந்த ரூபனுக்கு வலது காலில் படுக்கை புண் ஏற்பட்டது.இதனால் கிருமிகள் வலதுகால் எலும்பைத் தாக்கியுள்ளது. இதன் காரணத்தால் உயிர் ஆபத்து ஏற்படும் நிலையில் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இவருடைய உயிர் ஆபத்தை தடுக்க வேண்டுமானால் வலதுகாலை முற்றும் முழுதாக அகற்ற வேண்டும் எனவும் மருத்துவ நடவடிக்கைகள் எடுப்பதற்கு உடலில் இரத்தம் போதுமானதாக இல்லையென்றும் அவருடைய மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்று ராதா வான்காப்பு படை அணி என்றால் முழு சிங்களமே பீதிகொள்ளும். கிபீர் விமானம் பறந்தால் என்ன , மிக் 27 பறந்தால் என்ன … என்ன குண்டு மழை போட்டாலும் அதனை தமிழர் தாயகத்தில் இருந்து விரட்டி அடித்த பெரும் மறவர்கள் இவர்கள். இன்று உங்களிடம் கையேந்தும் நிலை இவர்களுக்கு… என்ன செய்வது ? உங்கள் உள்ளத்தில் ஒரு சிறு உணர்வு இருந்தால்…. நாம் தமிழனடா உன்னை கைவிட மாட்டோம் என்ற நினைப்பு இருந்தால் ..

தன் மான உணர்வு இருந்தால் தயவு செய்து இவருக்கு நேரடியா உதவுங்கள்… இது அதிர்வின் வேண்டுகோள்…

தொடர்புகளுக்கு:- 0094 77 99 13 302

S.VASANTHARUBAN
MULLIYAWALAI MULLAITIVU
BANK OF CELON
A/C NO.73935465
873014199v

-http://www.athirvu.com

TAGS: