சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி, மலாயாப் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் அஸ்மி ஷரோம் மீதான நிந்தனை வழக்கை மீட்டுக்கொண்டுள்ளார்.
“நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்ந்ததில் கூட்டரசு அரசமைப்பு எனக்களிக்கும் அதிகாரத்தைக் கொண்டு அஸ்மிக்கு எதிரான வழக்கை நிறுத்திகொள்ள முடிவு செய்தேன்”,என அபாண்டி ஓர் அறிக்கையில் கூறினார்.
சீபூத்தே எம்பி தெரேசா கொக் வழக்கிலும் இதேபோல் நடந்துள்ளதை அபாண்டி சுட்டிக்காட்டினார்.
நல்லது. மகிழ்ச்சியே. ஆனால் இதுவே நம்மவர்களில் ஒருவராக இருந்திருந்தால்?
மலேசியச் சட்டங்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி, அருமையான குப்பை கூளங்கள். இதோ ஓர் உதாரணம்: வெளிநாட்டு தொழிலாளர்கள் குறைக்கப் பட வேண்டும் என்பதற்காகவே, அவர்களுக்கான லெவி உயர்த்தப் படுகிறது, என துணை பிரதமர் கூறுகிறார். அப்படியானால், பின் எதற்காக, 15 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்களை இங்கே தருவிக்கப் போகிறார்?