நஜிப்மீதான புலன் விசாரணையை மீண்டும் தொடங்குவீர்: மன்னருக்கு 30,000பேரின் மகஜர்

petiபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மீது  மீண்டும்  விசாரணையைத்  தொடங்க  வேண்டும்  என்று  மாட்சிமை  தங்கிய  மாமன்னரையும்  ஆட்சியாளர்  மன்றத்தையும்  கேட்டுக்கொள்ளும்  இணையத்தள  மகஜர்  ஒன்றில்  இதுவரை  30,000  பேர்  கையொப்பமிட்டுள்ளனர்.

இது  இன்று  ‘1 Juta Desak Buka Kembali Siasatan Terhadap Najib Razak’ ( நஜிப்புக்கு  எதிரான  விசாரணை  மீண்டும்  தொடங்க  1மில்லியன்  பேரின்  கோரிக்கை) முகநூல்  பக்கத்தில்  குறிப்பிடப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லியால்  தொடக்கி வைக்கப்பட்ட  இந்த  மகஜர்,  மீண்டும்  விசாரணை  செய்ய  வேண்டும்  என்று  மலாய்  ஆட்சியாளர்களைக்  கேட்டுக்கொள்வதுடன்  விசாரணை  சுயேச்சையான  அரசுதரப்பு  வழக்குரைஞர்  ஒருவரின்  தலைமையில்  நடக்க  வேண்டும்  என்றும்  வலியுறுத்தியது.