தமிழர்கள் தலைமையாக உள்ள எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் நாளை தமிழினம் வாழ!

sasaதமிழர்கள் தலைமையாக உள்ள எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் நாளை தமிழினம் வாழ!

வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ.9 ஆயிரம் கோடி பதுக்கல்: ராமதாஸ் குற்றச்சாட்டு

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க 9 ஆயிரம் கோடி ரூபாயை ‌அதிமுகவும், திமுகவும் பதுக்கி வைத்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் அறிவிப்புக்கு‌ முன்னரே அனைத்து தொகுதிகளுக்கும் அக்கட்சிகள் பணத்தை கொணடு சென்று, ஊராட்சி வாரியாக பிரித்து வாக்காளர்களுக்கு வழங்க தயார் நிலையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வாக்காளருக்கும் 2 ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க அதிமுகவும், திமுகவும் திட்டமிட்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். இரு கட்சிகளும் பதுக்கி வைத்துள்ள பணத்தை கண்டுபிடித்து தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நாளை தமிழினம் விடுதலை பெற தமிழர்களை தலைமையாக கொண்ட கட்சிகளில் உள்ள எல்லோரும் ஒன்றுபட வேண்டும்! தவறுகள் எல்லாப்பக்கமும் உள்ளது, அதை களைந்து ஒன்றுபடுவோம்! நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ளவர்களை சாதி வெறியர்களாக பார்ப்பதும், பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ளவர்கள் நாம் தமிழரை நாடார் கட்சியாக பார்ப்பதும் அறவே தவிர்க்கப்பட வேண்டும்; பறையர் சமூகம் விடுதலை சிறுத்தைகள் கட்சியையே இன்னும் நம்புகின்றனர் அவர்கள் செய்த துரோகங்கள் தெரிந்த பின்னும்!

தமிழர்களாகிய நாம் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்திற்கு செல்ல வேண்டும்; அதுவே தமிழா விடுதலைக்கான முதல் படி! நாம் புரட்சி செய்யவில்லை, வாக்கு அரசியல் செய்கிறோம் என்பதை தமிழர்களை தலைமையாக கொண்டுள்ள கட்சித் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! அப்படியிருக்க தமிழர்களை தலைவர்களாக கொண்டுள்ள கட்சிகள் ஒன்றுபடுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை?

உங்கள் தன்முனைப்பு தமிழினத்தின் விடுதலை பாதையை தடுக்கிறதா? தகர்த்தெறிந்து ஒன்றுபடுங்கள் நாளை தமிழினம் வாழ!
http://senkettru.com/…/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B…/