அன்வார்: பிகேஆரும் டிஏபியும் சர்ச்சையை இப்போதும்கூட பேசித் தீர்த்துக்கொள்ள முடியும்

negoசரவாக்  பிகேஆரும்  டிஏபியும்  மாநிலத்  தேர்தலில்  ஆறு  தொகுதிகளில்  ஒன்றை  எதிர்த்து  மற்றொன்று  போட்டியிடும்  நிலையைத்  தவிர்க்க  பேச்சுகள்  நடத்துவதற்குக்  காலம் கடந்துவிடவில்லை  என்கிறார்   சிறையில்  உள்ள  முன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்.

அவை  போட்டியிடும்  தொகுதிகளில்  பக்கத்தான்  ஹராபான்  வெற்றியை  உறுதிப்படுத்த  இரண்டு  கட்சிகளும் இவ்விவகாரம்  குறித்து  விவாதிக்க  வேண்டும்  என்றவர்  வலியுறுத்தினார்.

“(சரவாக்  தேர்தலில் இப்படி ஒரு  நிலை  ஏற்பட்டதற்கு) வருந்துகிறேன்.

“இப்போதைக்கு  பக்கத்தான்  ஹராபான்  வெற்றிக்காக  அவை  பாடுபட  வேண்டும்”, என   ஒரு  வழக்கின்  பொருட்டு  இன்று  நீதிமன்றத்துக்கு   வந்தபோது  அன்வார்  குறிப்பிட்டார்.

“இரண்டும் இப்போதும்கூட  பேசித் தீர்த்துக்கொள்ள  முடியும். அதுதான்  நல்லதும்கூட”, என்றார்.