1எம்டிபி குளறுபடிகளுக்கு எதிரணியே காரணமாம்: தாய் கிங் கூறுகிறார்

tkingபிஎன்  நேரடி  வேட்பாளர்  ஒருவர்  1எம்டிபி  மோசடிகளுக்கு  ஒரு  புது  விளக்கம்  தந்திருக்கிறார். அங்கு  நடந்துள்ள  குளறுபடிகளுக்கு  எதிரணிதான்   காரணம்  என்கிறார்.

எதிரணி  அரசாங்கத்தைக்  கண்காணிக்கும்  பணியைச்  சரிவர  செய்யவில்லை,  அதுதான்  இத்தனை  குளறுபடிகளுக்கும்  காரணம்  என  டுடோங்  வேட்பாளர்   தியோங்  தாய்  கிங்  கூறினார்.

எதிரணி  அதன்  கடமையைச்  செய்யத்  தவறிவிட்டதாக  சைனா   பிரஸுக்கு  நேர்காணலில்  அவர்  கூறினார்.

கடமையைச்  செய்யத்  தவறிய  எதிரணி  தேவையற்றது  என்றாரவர்.

“கடமையைச்  செய்யத்  தவறிய  அவர்களுக்கு  எதற்கு  வாக்களிக்க  வேண்டும்?”, என்றவர்  வினவினார்.

எனவே,  வாக்காளர்கள்  சரவாக்  பிஎன்னுக்கே  வாக்களித்து  அதற்கு  மிகப்  பெரிய  வெற்றியைத்  தேடிக்  கொடுக்க  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டார்.