மே தினப் பேரணி கவனத்தை தொழிலாளர்மீது திருப்பும்

mayநாட்டில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலக  வேண்டும்  என்ற  கோரிக்கைகள்  பெருகிவரும்  வேளையில்  இவ்வாண்டு  மேதினப்  பேரணி  தொழிலாளர்  நலன்மீது கவனத்தைத்  திருப்பும்  நோக்கத்தைக்  கொண்டிருக்கும்.

மலேசியாவைக்  காக்கும்  முயற்சியில்   தொழிலாளர்களின்  நலனை  முன்னிறுத்துவதற்கே  முன்னுரிமை  வழங்கப்பட  வேண்டும்  என  பார்டி  சோசலிஸ்  மலேசியா  தலைமைச்  செயலாளர்  ஏ.சிவராஜன்  கூறினார்.

“நாங்கள்  என்ன  சொல்ல  வருகிறோம்  என்றால்,  தொழிலாளர்களின்  நலனுக்கு  முன்னுரிமை  கொடுங்கள். அதன்மூலமாகத்தான்  மலேசியாவைக்  காக்க  முடியும்.

“மக்கள்  விவகாரங்கள் பல  ஒதுக்கப்பட்டுக்  கிடக்கின்றன. 1எம்டிபிமீதும்  நஜிப்பைப்  பதவி  விலகச்  சொல்வதிலும்தான்  கவனம்  செலுத்தப்படுகிறது”, என  சிவராஜான்  கோலாலும்பூரில்  சீன  அசெம்ப்ளி  மண்டபத்தில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

இவ்வாண்டு  மேதினப்  பேரணிக்கான  கருபொருள், “தொழிலாளர்களுக்கு  முன்னுரிமை  கொடுத்து மலேசியாவைக்  காப்போம்”.