நூருல் இஸ்ஸா: சரவாக் சச்சரவை விட்டு முன்னோக்கிச் செல்வோம்

nurulசரவாக்  பிகேஆரும்  டிஏபியும் சரவாக்   மாநிலத்  தேர்தலில்  ஆறு  இடங்களில்  ஒன்றை  எதிர்த்து  மற்றொன்று  போட்டியிடுவதிலிருந்து  பின்வாங்கத்  தயாராக  இல்லை  என்ற  போதிலும்  அதைப்  பெரிதுபடுத்தாது  மாநிலத்  தேர்தலில்  கவனம்  செலுத்தப்  போவதாக  பிகேஆர்  தெரிவித்துள்ளது.

“நான்  இதன்(சச்சரவு)மீது  கவனம்  செலுத்த  விரும்பவில்லை. இதைக்  கடந்து  செல்ல  விரும்புகிறேன்”, என  பிகேஆர்  உதவித்  தலைவரும்  தேர்தல்  இயக்குனருமான   நூருல்  இஸ்ஸா  அன்வார்  கூறினார்.

தொகுதி  தொடர்பான  சச்சரவுக்கு  யார் காரணம்  என்று  அவர் விவரிக்கத்  தயாராக  இல்லை.

மே  7  சரவாக்  தேர்தலுக்குப்  பின்னர்   கட்சி அவ்விவகாரத்தை  ஆராயும்  என்றாரவர்.

சரவாக் சச்சரவு  தீவகற்ப  மலேசியாவுக்குப்  பரவாது  என்று  பந்தாய்  எம்பியுமான  நூருல்  நம்புகிறார். தீவகற்பத்தில்  பக்கத்தான்  ஹராபான்  உறவுகள்  வலுவாக  உள்ளன  என்றார்.