ஐஜிபி உச்ச நீதிமன்றத்தின் கைது ஆணை உத்தரவுப்படி நடந்துகொள்வார்

 

IGPtoexecuteFCorderஇந்திரா காந்தி குழந்தை பராமரிப்பு வழக்கில் பெடரல் உச்ச நீதிமன்றம் குற்றவாளி முகமட் ரித்துவான் அப்துல்லாவை கைது செய்யுமாறு போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகாருக்கு இன்று உத்தரவிட்டது. அந்த உத்தரவை காலிட் நிறைவேற்றுவார்.

இதற்கு முன்னர், இந்த விவகாரத்தில் போலீஸ் நடுநிலைமை வகித்தது. அதன் கூற்றுப்படி சிவில் நீதிமன்றமும் ஷரியா நீதிமன்றமும் ஒரே மாதிரியான தகுதியுடையவை; அவற்றின் தீர்ப்புகள் ஒன்றுக்கொன்று முரணானதாக இருந்தன.

“எனினும், நீதி பரிபாலன அமைவின்படி பெடரல் நீதிமன்றம் நாட்டின் உச்ச நீதிமன்றமாகும். போலீஸ் அதன் உத்தரவுப்படி நடந்துகொள்ளும். நாங்கள் கைது ஆணையை நிறைவேற்றுவோம்”, என்று காலிட் இன்று கூச்சிங்கில் செய்தியாளர்களிடம் கூறினார்.