முன்னாள் மேஜர் ஜைடி அமானாவிலிருந்து டிஏபிக்குக் கட்சி மாறினார்

majorஎட்டு  மலாய்க்காரர்கள்  டிஏபி-இல்  சேர்ந்திருப்பதாக  பினாங்கு  டிஏபி  அறிவித்தது.  அவர்களில்  இருவர்  முன்னாள்  பாஸ்  உறுப்பினர்கள்.  ஒருவர்  பக்கத்தான்  பங்காளிக்  கட்சியிலிருந்து  கட்சி  மாறியுள்ளார்.

இந்த  எண்மரில்  பிரபலமானவர்  ஆகாயப்படையின்  முன்னாள்  மேஜர்  ஜைடி  அஹ்மட்.

பினாங்கு,  கப்பாளா  பத்தாசைச்  சேர்ந்தவரான  ஜைடி, 2013  பொதுத்  தேர்தலின்போது  அழியா  மை  விவகாரத்தில்  தேர்தல்  ஆணையத்துக்கு  எதிராக  போலீஸ்  புகார்  செய்தவர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

2014-இல்  இராணுவ  நீதிமன்றம்  ஜைடியைப்  பணிநீக்கம்  செய்தது.  அதன்  பின்னர்  பாஸில்  சேர்ந்த  அவர்  பிறகு  அமானாவுக்குச்  சென்று  இப்போது  டிஏபி-இல்  வந்துள்ளார்.

டிஏபிதான்  தனக்குப்  பொருத்தமான   இடம் என்றவர்  நினைக்கிறார். “நான் இன்னமும்  பக்கத்தான்  ஹராபானில்தான். அதுதான்  முக்கியம்”, என்றார்.