நகர்ப்புற சீனர்கள் பிஎன்னுக்குத் திரும்புவார்கள்: ஜாஹிட் நம்பிக்கை

reaசரவாக்கில்  நகர்ப்புற  சீனர்களின்  ஆதரவு  பிஎன்னுக்குத்  திரும்பவும்  கிடைக்கும்  என்று  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  நம்புகிறார்.

பராமரிப்பு  முதலமைச்சர்  அடினான்  சாதேமின்  ஆட்சியில்  சீனர்கள்  மனம்  மாறியிருக்கிறார்கள் என்றாரவர்.

“முந்தைய  தேர்தல்கள்போல்  இல்லை.

“அரசாங்கத்தில் சீனர்களின்  பிரதிநிதித்துவம்  வலுவாக  இருக்க  வேண்டும். சீனர்கள்  துணை  அமைச்சர்களாகவும்  அமைச்சர்களாகவும்  நியமிக்கப்படுவதை  விரும்புகிறேன்”, என  ஜாஹிட்  கூறினார்.

சீனர்கள்  பெருமளவில்  ஆதரவு  கொடுத்தால்  ஒரு  சீனரைத்  துணை  முதல்வராக  நியமிக்குமாறு  அடினானிடம்  பரிந்துரைக்கவும்  தயார்  என்று  அவர் சொன்னார்.