அன்புடையீர் தமிழர் உறவுகளே வணக்கம் . வாழ்க தமிழ். மலேசியத்தமிழர் தேசியப்பேரவையில் சேர தமிழர் சார்ந்த சங்கங்கள் வரவேற்கப்டுகின்றனர்.

contentwriting_1வெளி நாட்டு தமிழர் சங்கங்களும் ஓர் இணைப்பேராளர்களாக இணையலாம். தமிழர் தேசியம் எனும் உலகாவிய தமிழர்கள் அவரவர் வாழ் நாடுகளில் “தமிழர் தேசியம்” எனும் தமிழர் ஒன்றிணையம் சிந்தனையில் சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் பண்பாடுகள் மேம்பாட்டுக்கு துணை நிற்க அழைக்கிறோம்.

உலக அரங்கில் தமிழர்கள் இணையும் தலமாக, களமாக தமிழர்களின் உலக அங்கீகாரம் கோர்வையில் இணைய வேண்டுகிறோம்.

தமிழர் தாய், தந்தை வழித்தோன்றல் அல்லது இரண்டில் ஒருவராவது தமிழராக இருத்தல் அவசியம். மத சார்புகளற்ற அவரரவர் மதம் சமயம் பேணும்
தமிழர்கள் அல்லது நாத்திக ஆதித்தமிழர்கள் திராவிட கலப்பில்லாமல் இருத்தலும் அவசியம். மொழியால் இனத்தால் இதரவர்கள் தாங்கள் தங்கள் தாய் மொழிக்கு துரோகம் செய்யும் எந்த இதவர்களும் தமிழர் தேசியத்தில் இணைய வேண்டாம்.

பல கலப்பு கசப்பு அனுபவங்களுக்குப்பின் இந்த 21 ம் நூற்றாண்டில் உலகத் தமிழர்கள் எடுத்துள்ள முடிவு அடுத்த தலைமுறை தமிழர் இனம், நாடு ,மண் உரிமையில் ஜனநாயகம் தழைக்க உங்கள் இனம்மான உணர்வுகள் தேவை கருதி தமிழர் தேசியப்பேரவையில் இணையும் படி அழைக்கிறோம் தமிழர் தேசியம் எனும் உலகளவு பதிவுக்கு பணியாற்ற அழைக்கிறோம்.

தகவல் தந்து தகவல் பெருவதுடன் தமிழர் தேசியம் இணைப்பில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.

மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம்
இன நலம் எல்லாபுகழும் தரும்.

வள்ளுவர் கண்ட அறமும் ,கம்பன் கண்ட தமிழ் கனாவும் ..பாரதி கண்ட இனக்கனா,பிரபாகரன் கண்ட தமிழர் தேசியம் , தமிழர் நாடும் -தமிழ் ஈழமும் நம் மண்ணுரிமை என்றே எழுவோம். இணைய [email protected]என்ற மின்னஞ்சல் வழி 25/ 6/2016 குள் இணையவும்.
தமிழர்கள் வீரமும் அறமும் பாதுக்காப்புடன் வென்றாக வேண்டும். எனும் உங்கள் கனா நிஜமாகும்.
நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்

இவண்
உங்கள் தமிழர் சேவையில் என்றும்
தமிழர்த்திரு. பொன் ரங்கன்
செயலர், மலேசியத்தமிழர் தேசியப்பேரவை
நாளது 12/5/2016 கோலாலம்பூர்
மலேசியா 016 694422