நஜிப்: 1எம்டிபி நிர்வாகத்திலும் கணக்கிலும் முறைகேடுகள் இல்லை

acct1எம்டிபி-இன் கணக்குகளிலும்  நிர்வாகத்திலும்  முறைகேடுகள்  நிகழ்ந்ததில்லை  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இன்று  நாடாளுமன்றத்தில்  கூறினார்.

“பிஏசி (பொதுக் கணக்குக்குழு)  1எம்டிபி  கணக்குகளிலும்  நிர்வாகத்திலும்   முறைகேடுகள்  நிகழ்ந்ததில்லை  என்று  கூறியுள்ளது. அதில்  சீர்கேடுகளும்  இல்லை.

“நிறுவனத்தின்  நிர்வாகம்  மட்டுமே  பலவீனப்பட்டிருந்தது”, என  நஜிப்  (பொக்கோக்  சேனா,  எம்பி) மாபுஸ்  ஒமாரின்  கேள்விக்குப்  பதிலளித்தார்.

பிஏசி  அறிக்கை  நாடாளுமன்றத்தில்   தாக்கல்  செய்யப்பட்ட  பின்னர்  1எம்டிபி   என்ன  நடவடிக்கை   எடுத்துக்கொண்டது  என  மாபுஸ்  கேட்டிருந்தார்.

“பிஏசி-இன்  பரிந்துரைகளை  ஆராய்ந்து  மேல்  விசாரணையும்  மேல்நடவடிக்கையும்  தேவையா  என்பதை  போலீஸ்  முடிவு  செய்யும்  போலீஸ்  படைத்  தலைவர்  கூறியுள்ளார்”, என  நஜிப்  மேலும்  கூறினார்.