எம்எசிசி: குவான் எங் மீதான விசாரணை முடிவுற்றது, வழக்குத் தொடர்வதா என்பது ஏஜியைப் பொறுத்தது

 

macc completesபினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிரான விசாரணையை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) முடித்துக்கொண்டு விட்டதாகவும் அதன் விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவரிடம் (ஏஜி) தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும் அந்த அமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறது.

குவான் எங்கிற்கு எதிரான எந்த விசாரணை மீதான அறிக்கை ஏஜியிடம் தாக்கல் செய்யப்பட்டது என்பதை எம்எசிசி திட்டவட்டமாக கூறவில்லை என்றாலும், அது முதலமைச்சரின் ஜாலான் பின்ஹோர்னில் இருக்கும் அவரது வீடு சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த விசாரணையின் விளைவாக சட்ட நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது ஏஜியைப் பொறுத்தது. தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை மீது ஏஜி திருப்தி அடைந்தால், பொருத்தமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்எசிசியின் அறிக்கை திருப்திகரமானதாக இல்லையென்றால், சட்ட நடவடிக்கைள் ஏதும் எடுக்கப்படாது என்று அந்த ஆணையம் கூறிற்று.