எஸ்ஆர்சி பணம் பற்றிக் கேள்வி எழுப்புவதே நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்

othபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அவரது  வங்கிக்  கணக்கில்  போடப்பட்ட  பணம்  பற்றி  அறிவாரா  என்ற  கேள்விக்குப்  பதிலளிக்க  மறுத்த  அரசாங்கம்  அது  தொடர்பான  வழக்கு  நீதிமன்ற  விசாரணையில்  இருப்பதைச்  சுட்டிக்காட்டியது.

எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  சென். பெர்ஹாட்டிலிருந்து  ரிம42 மில்லியன்  நஜிப்பின்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டது  பற்றி  எதிரணி  நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  கேள்வி  கேட்டிருந்தார்கள்.

“இக்கேள்விக்குப்  பதிலளிக்க  முடியாது. இவ்விவகாரம்  நீதிமன்றத்தில்  விசாரணை  நிலையில்  உள்ளது.   அவைத்  தலைவர்(பண்டிகார்  அமின்  மூலியா)  மார்ச்  31-இலேயே   இது  தொடர்பாக  அறிவிக்கை  வெளியிட்டிருக்கிறார்”, எனப்  பிரதமர்துறை  அமைச்சர்  அஸலினா  ஒஸ்மான்  கூறினார்.

டாக்டர்  கோ  சுங்  சென்(டிஏபி- கம்பார்),  மாபுஸ்  ஒமார் (பாஸ்- பொக்கோக்  சேனா) ஆகியோரின்  கேள்விக்கு   அளித்த  எழுத்து  வடிவ  பதிலில்  அஸலினா  இவ்வாறு  கூறினார்.