பினாங்கு ஆயர் ஈத்தாமில் 1எம்டிபி-இன் நிலக் கொள்முதல் முடக்கம்

engபினாங்கு  அரசு,  1எம்டிபி  ஆயர்  ஈத்தாமில்  வாங்கிய  234-ஏக்கர்  நிலத்தை  முடக்கி  வைத்துள்ளதாக  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறினார்.

1எம்டிபி  அந்நிலத்தை  ரிம1.38 பில்லியனுக்கு 13வது  பொதுத்  தேர்தலுக்கு  முன்னதாக  வாங்கியது.

அந்நிலத்திலிருந்து  வெளியேற்றப்படும்  மூவாயிரம்  குடும்பங்களுக்கு  9,999  வீடுகளை 1எம்டிபி   கட்டிக்கொடுக்கும்  என்ற  நம்பிக்கை  இல்லாததால்  மாநில  அரசு  அந்நிலக்  கொள்முதலைத்  தடுப்பதாக  லிம்  தெரிவித்தார்.

“மிகப்  பெரிய  முதலீடு அத்துடன்  நிலம்  மொத்தமும்  அதற்கு(1எம்டி)ச் சொந்தமானதல்ல  என்பதால் கொடுத்த  வாக்குறுதிகளை  நிறைவேற்ற  முடியுமா  என்ற ஐயம்  எழுகிறது”,  என  லிம்  ஊடக  அறிக்கையில்  கூறினார்.