கோலா கங்சாரில் மும்முனைப் போட்டி என்றால் எதிரணிக்கு பிஎஸ்எம் உதவாது

jkumarஎதிர்வரும்  கோலா  கங்சார்  இடைத்  தேர்தல்  மும்முனைப்  போட்டியாக  மாறினால்   எதிரணியின்  பரப்புரைக்கு  பார்டி  சோசலிஸ்  மலேசியா உதவப்  போவதில்லை.

“மும்முனைப்  போட்டி  வேண்டாம்  என்று (எதிரணிக்  கட்சிகளிடம்)  கூறி  இருக்கிறோம்.

“அதற்கு  மாறாக  செயல்பட்டால்  எங்கள்  உதவி  அவர்களுக்குக்  கிடையாது”, என  பிஎஸ்எம்  தலைவர்  மைக்கல்  ஜெயகுமார்  தேவராஜ்  இன்று  பிரிக்பீல்ட்சில்  கட்சித்  தலைமையகத்தில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கூறினார்.

தம் தொகுதியான  சுங்கை  சிப்புட்டை  அடுத்துத்தான்  கோலா  கங்சார்  உள்ளது  என்பதை  அவர்  சுட்டிக்காட்டினார்.