நினைவுகள்

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

 

கனவுகளில் நினைவுகளை 
கலைத்து பார்க்கிறேன் -நினைவோ 
மேகமாய் பிரிந்து மேக மூட்டமாய் 
memoriesஎன்னை சூழ்கிறது 

கண்ணில் மழையாய் நினைவுகள் 
கனவில் பொழிய 
கன்னங்களோடு கண்ணீர் துளி 
அழியாத பாதைகளாய் காய்கிறது 

நிலையான நெஞ்சில் நினைவுகள் 
அலையாக அலைகிறது 
மலையான மனதில் நினைவுகள் 
உளியாய் குடைகிறது 

நான் சுவாசிக்கும் நினைவுகள் 
புயலாக வீசி 
நான் நேசிக்கும் நினைவுகளை 
தூசி தட்டுது 

அவள் என் மார்சாய்ந்து 
ஓய்ந்த இதயம் 
இன்று தட்டி தட்டி எழுப்புகிறது 
காய்ந்த நினைவுகளை 

நான் மறைந்து நின்றாலும் 
மழைச் சாரலாய் நினைவுகள் 
என் உள்ளம் புகுந்து 
நினைவினை நனைக்குதே

தொலைக்காத இடத்தில் 
தொலைந்த துகளாய் 
மறக்க முடியாத இதயத்தில் 
மறைக்கும் நினைவுகள் 

வெறுத்தாலும் களைக்கலாம் 
நினைவுகளை 
நினைத்ததால் கோர்க்கிறேன் 
வார்த்தைகளை 

விட்டுச் செல்ல நினைக்கவில்லை 
உன் நினைவுகளை 
என்னை தொட்டுச் செல்லும் 
உன் கனவுகளால் 

சொல்லால் உன்னை வெல்ல 
முடியவில்லை 
உன்னால் விட்ட நினைவை அல்ல 
முடியவில்லை 

நினைவுகளை மட்டுமே 
விட்டு சென்றாயோ – என் 
கனவுகளை மட்டுமே 
தொட்டு செல்கிறது 

பூவான உன் புன்னகையில் 
பூத்தேனே பெண்ணே 
வாடாத உன் வாசனையை – என் 
வாழ்வாக்கத்தானே 

வீசும் தென்றலில் நீ 
மோதும் பூவாய் என்னில் சாய்ந்து நீ 
பேசும் வார்த்தையில் 
எழுதும் வரிகளாய் என்னுள் பாய்ந்து 

பாலா போன மனசுல 
பாலாய் உன் நினைவுகள் பாய 
வெட்டு போட்ட நெஞ்சுல 
பத்து போட்டு போகுதே 

உருகும் நினைவுகள் 
உள்ளத்தில் 
கருகிடுமோ கனவுள் 
கண்ணுக்குள் 

வெளுத்தாலும் பால் 
பால் தான் – நீ என்னை 
வெறுத்தாலும் என்னுள் என்றுமே 
மேல் தான் நீ 

அடிமேல் அடி வைத்து 
நடந்தாயடி மண்ணில் 
செடிமேல் கொடி பின்னி 
கடந்தாயடி என்னில் 

உன்னை மெட்டி இழுக்க (எட்டி பிடிக்க) 
முடியவில்லை 
என்னால் மெட்டி போட 
முடியவில்லை 

நினைவோ ஒரு பறவை அதன் 
சிறகோ பல வண்ண கலவை 
என்னை விட்டு பறக்காது – சிறகை 
என் நெஞ்சில் தட்டி சிரிக்குது 
வண்ண நினைவுகள் பறக்குது. 

பூத்த மலராய் என்னில் 
கோர்த்த உன் நினைவுகளை உதிர்துவிட்டேன் 

என் நினைவிலேயே செதுக்குவேன் செப்பு சிலையாக உன்னை 
நான் செத்தாலும்… 

– நிவாஸ் ந

TAGS: