சுப்ராவும் பதவி துறப்பேன் என்கிறார்

 

micpledgeஹுடுட் சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டால் அமைச்சரவையிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கும் இதர பாரிசான் தலைவர்களுடன் மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியமும் சேர்ந்து கொண்டுள்ளார்.

நாம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் மீறி ஹுடுட் சட்டம் அமல்படுத்தப்படும் என்றால், “நானும் எனது அரசாங்கப் பதவியைத் துறந்துவிடுவேன்” என்று சுபாங் ஜெயாவில் இன்று மஇகா சிறப்புப் பொதுக்கூட்டத்தில் டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.