நானும் பதவி துறப்பேன் என்கிறார் வீ கா சியோங்

 

weetoowillquitசர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஹுடுட் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் தாமும் பதவியிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக மசீசவின் துணைத் தலைவர் வீ கா சியோங் அறிவித்துள்ளார்.

இந்த மசோதாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய கடமையும் செய்தே தீரவேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்று வீ கூறுகிறார்.

இது வெறும் மிரட்டல் அல்ல. இது மசீச தலைவர்களின் பொறுப்பு வாய்ந்த முடிவு என்று வீ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.