கொலை செய்யப்பட்ட நடிகர் கலாபவன் மணி! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

kalabhavan maniபிரபல நடிகர் கலாபவன் மணியின் உடலில் நச்சுத்தன்மை வாய்ந்த மது கலந்திருந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் கலாபவன் மணி (45). இவர் கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த போது, அதில் பூச்சி கொல்லி , எத்தனால், மெத்தனால் வேதிபொருள் இருந்தது தெரிய வந்தது.

ஆனால் முன்னதாக அளவுக்கதிகமான மது அருந்தியதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது.

இது தொடர்பாக அவரது சகோதரர் ராமகிருஷ்ணனும் புதிய சந்தேகங்களைக் கிளப்பினார். இதனால், கலாபவன் மணியின் உடல் உறுப்புகள் ஹைதராபாத் ஆய்வுக் கூடத்திலும் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது.

தற்போது அந்த சோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கலாபவன் மணி உடலில் நச்சுத்தன்மை வாய்ந்த மது கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்தது யார் என பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-http://news.lankasri.com