கோலா கங்சார் தேர்தலுக்கு பிஎன்னின் புதிய வியூகம்

bnபாரிசான் நேசனல்   கோலா கங்சார்  நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ‘வேட்பாளரில்லாமல்   பரப்புரை’  என்ற வியூகத்தைக் கடைப்பிடிக்கும்.  அதன் வேட்பாளரான மஸ்துரா முகம்மட் யாசிட்    தம் கணவர்   இறந்த  துக்கத்தில் இருப்பதால்  பிஎன்   இந்த அணுகுமுறையைக் கையிலெடுத்துள்ளது எனத் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

இறந்தவர்களுக்குத்   துக்கம் அனுசரிக்கும் வேட்பாளர்களின் நிலை   குறித்து அம்னோ    பேராக் முப்தி ஹருஸானி ஜக்கரியாவுடனும்   தேசிய பாத்வா மன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனை கலந்து கொண்டதாக   துணைப் பிரதமர் தோக்கியோவில்   மலேசிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மஸ்தாராவை   வாக்காளர்களிடம் அறிமுகப்படுத்த பல உத்திகள் பற்றி ஆலோசிக்கப்பட்டிருப்பதாக ஜாஹிட் ஹமிடி கூறினார். அவரது உரைகளை   ஒலிப்பதிவு  செய்து   வாக்காளர்களுக்கு   ஒலிபரப்புவதும்   அதில்  அடங்கும்.