குடிநுழைவுத் துறை: கீழறுப்பில் ஈடுபட்ட 15பேர் பணிநீக்கம், 14பேர் இடைநீக்கம்

immigகுடிநுழைவுத்  துறை  அதிகாரிகள்  மலேசியக்  குடிநுழைவு  முறையில் (MyIMMs-சில்)  மென்பொருள்  திருடியிருக்கிறார்கள், கீழறுப்புச்  செய்திருக்கிறார்கள்  என  அத்துறை  தலைமை  இயக்குனர்  சகிப்  குஸ்மி  கூறினார்.

அதன்மீது  நடக்கும்  விசாரணையில்  இதுவரை  15பேர்  பணிநீக்கம்  செய்யப்பட்டிருப்பதாகவும்  14பேர்  பணி இடைநீக்கம்  செய்யப்பட்டிருப்பதாகவும்  அவர்  தெரிவித்தார்.

குடிநுழைவுத்  துறை  அதிகாரிகளில்  சிலருக்கு  ஆள்கடத்தல்  கும்பல்களுடன்  தொடர்பு  இருக்கலாம்  என்றும்  நம்பப்படுவதாக  சகிப்  கூறினார்.