அம்பாங் தமிழ்ப்பள்ளி இணைக்கட்டிடம் கல்நடும் விழா அழைப்பிதழ்

invitations-templateசிலாங்கூர் மாநிலத்தில் அம்பாங் நகர் மையத்தில் அமைத்திருக்கும் அம்பாங் தமிழ்ப்பள்ளியின் நான்காவது இணைக்கட்டடம் கல்நடும் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (3/7/216) காலை 9 மணியளவில் மிக விமர்சையாக நடைபெறும்.

இவ்விழாவினை மஇகா தலைவரும் சுகாதார அமைச்சருமாகிய மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் அவர்கள் நமது சமய சாங்கியப்படி நடத்தி வைப்பார் என அப்பள்ளியின் வாரிய துணைத் தலைவர் திரு பொன் ரங்கன் தெரிவித்துள்ளார்

பிரதமர் துறையின் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு நிதியின் இயக்குநர் முனைவர் டத்தோ ராஜேந்திரன் முன்னிலையில்
அம்பாங் வட்டார பொது மக்கள், பெ ஆ சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியோரின்   ஒத்துழைப்புடன் அம்பாங் தமிழ்ப்பள்ளி வாரியக்குழுவின் தலைவர் திரு ஜேம்ஸ் காளிமுத்து தலைமையில் நடைபெறும்.

தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து உங்கள் பங்காக ஒரு செங்கல் வாங்கி உதவிட அன்புடன் வேண்டுகிறோம். தமிழோடு உயர்வோம். நன்றி, வணக்கம்.

பொன் ரங்கன்
துணைத் தலைவர்
அம்பாங் தமிழ் பள்ளி வாரியம்
016 6944223