தமிழக பள்ளிகளில் தமிழ் அழிக்கப்பட்டு வருகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

pon_radhakrishnan_001தமிழ் மொழியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் 29-ந்தேதி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இதையொட்டி தருண் விஜய் எம்.பி. திருவள்ளுவர் – கங்கை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தை அவர் இன்று கன்னியாகுமரியில் தொடங்கி உள்ளார்.

கங்கை நதிக்கரையில் நடைபெறும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும்.

தற்போது தமிழக பள்ளிகளில் தமிழ் அழிக்கப்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளில் தமிழ் சமுதாயம் தமிழ் மொழியை தெரியாத நிலை ஏற்பட்டு விடும். தமிழ் மொழியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஆலயங்கள் மற்றும் கோவில் சொத்துக்களை பாதுகாக்க கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

-http://www.nakkheeran.in

TAGS: