மகாதிர் இஸ்லாத்தின் எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார்: உத்துசான் குற்றச்சாட்டு

utusanமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்   தம்  சொந்தக்  கொள்கைகளை  மீறி,  இஸ்லாத்தின்  அப்பட்டமான  எதிரியான  டிஏபி-யுடன்   கூட்டுச்  சேர்ந்து  கொண்டிருப்பதாக  அம்னோவுக்குச்  சொந்ந்தமான  உத்துசான்  மலேசியா  குற்றஞ்  சாட்டியுள்ளது.

மகாதிர்  தாம்  நீண்ட  காலமாகக்  கடைப்பிடித்து வந்த  கொள்கைகளிலிருந்து  விலகிச்  சென்று  விட்டார்  என  பாஸ்  ஆன்மிக  ஆலோசகர்   ஹருன்  டின்  கூறியதை  அச்செய்தித்  தாள்  மேற்கோள்  காட்டியுள்ளது..

“நீங்கள்  இஸ்லாத்தின்  எதிரிகளுடன்   நட்பு  பாராட்டினால்  நீங்களும்  அவர்களைப்போல்  ஆவீர்கள்”, என்று  ஹருன்  கூறியதாக   உத்துசான்   தெரிவித்தது.