எம்ஏசிசி செய்தியாளர் கூட்டம்: பல ஊடகங்களுக்கு அனுமதி இல்லை

maccஇன்று   நடைபெற்ற   மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையத்தின்  செய்தியாளர்  கூட்டத்தில்  கலந்துகொள்ள  சில   ஊடகங்கள்  தவிர்த்து  பலவற்றுக்கு  அனுமதி  அளிக்கப்படவில்லை.

ஆணையத்தின்  அதிகாரிகள்   செய்தியாளர்  கூட்டம்  ஒன்று  நடந்ததாகவே  காட்டிக்கொள்ளவில்லை.

“செய்தியாளர்  கூட்டம்  எதுவும்  நடக்கவில்லை.  குறிப்பிட்ட  சில  ஊடகங்களுக்கும்  (எம்ஏசிசி  தலைவர்)  அபு காசிமுக்குமிடையில்  ஒரு  நேர்காணல்  நடந்தது,  அவ்வளவுதான்”,  என  அதிகாரிகள்  மலேசியாகினியிடம்  தெரிவித்தனர்.

முன்னதாக, இன்று  நண்பகல்   12 மணிக்கு  எம்ஏசிசி  தலைமையகத்தில்  செய்தியாளர்  கூட்டமொன்று  நடப்பதாக  ஊடகங்களிடம்  தெரிவிக்கப்பட்டிருந்தது.