புக்கிட் அமானில் அமைதி இருக்காது: ஐஎஸ் எச்சரிக்கை

is“புக்கிட்  அமானில்  உள்ளவர்களே,  உங்களுக்கு  அமைதி  என்பதே  கிடையாது. திரும்பி  வந்து……..உங்களைக்  கொல்லப்  போகிறோம். தாயக  நண்பர்கள்  உங்களை  வேட்டை  ஆடுவார்கள்”.

ஆகக்  கடைசியாக  செவ்வாய்க்கிழமை  வெளியான  அதன்  பிரச்சாரக்  காணொளியில்  இஸ்லாமிய  பயங்கரவாத  அமைப்பான  ஐஎஸ்  இந்த  எச்சரிக்கையை விடுத்துள்ளது.  காணொளியில்  காணப்படும்  ஒரு  மலேசியர்  இந்த  எச்சரிக்கையை  விடுத்தார்.

அவரும்  இன்னுமிரு  ஐஎஸ்  பயங்கரவாதிகளும்  மூன்று  பிணையாளிகளின்  தலையை  வெட்டும்  காட்சி  அக்காணொளியில்  இடம்பெற்றிருந்தது.

அந்த  ஆடவர்  நெகிரி  செம்பிலானைச்  சேர்ந்த  முகம்மட்  ரபி  உடின்  என  அடையாளம்  கண்டு  பிடிக்கப்பட்டிருப்பதாக   புக்கிட்  அமான்  சிறப்புப்  பிரிவின்   பயங்கரவாத- எதிர்ப்புப்  பிரிவுத்  தலைவர்  ஆயுப்  கான்  மைடின்  பிச்சை  கூறினார்.

அக்  காணொளியில்  ரபி,  ஐஎஸ்  ஆதரவாளர்கள்  எந்த  வழியிலாவது  இஸ்லாத்தை  நம்பாதவர்களைக்  கொல்ல  வேண்டும்  என்று  வலியுறுத்துகிறார்.

“எங்கு  கண்டாலும்  அவர்களைக்  கொல்லுங்கள்….கார்  இருக்கிறதா,  மோதித்  தள்ளுங்கள்…..

“கத்திகள்  போன்ற  ஆயுதங்களைக்  கொண்டு  நெஞ்சில்  குத்துங்கள்”, என்றாரவர்.