மைவாட்ச் தலைவர் பலரை மிரட்டிப் பணம் பறித்தாராம்

mywatமலேசிய  குற்றக் கண்காணிப்பு  அமைப்பு(மைவாட்ச்)  தலைவர்  ஆர்.ஸ்ரீசஞ்சீவன்  தங்களிடமும்  மிரட்டிப்  பணம்  பறித்திருக்கிறார்  என்று  மேலும்  மூவர்  முன்வந்து  புகார்  செய்திருக்கிறார்கள்  என   இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்   காலிட்  அபு  பக்கார்  கூறினார்.

இன்று   அம்பாங்கில்   செய்தியாளர்   கூட்டமொன்றில்  பேசிய  அவர்,  சஞ்சீவன்  கைது  செய்யப்பட்ட  செய்தி  வெளியானதும்  அம்மூவரும்  போலீசை  அணுகியதாகத்  தெரிவித்தார்.
சட்டவிரோத  சூதாட்ட  விடுதி  ஒன்றை   நடத்திவரும்  ஒரு  நபர்  சஞ்சீவன்  தன்னிடம்  பாதுகாப்புப்  பணம்  கேட்டு  மிரட்டுவதாக  புகார்  செய்ததை  அடுத்து  அவரையும்  அவரின்  கார்  ஓட்டுனரையும் போலீசார்   நேற்றுக்கு  முன்தினம் கைது  செய்தனர்.

அந்த  நபர்  இப்போது  ஒரு  சாட்சியாக  போலீஸ்  பாதுகாப்பைப்  பெற்றிருக்கிறார்  என்றும்  அவர்மீது  குற்றம்  சுமத்தும்  திட்டம்  இப்போதைக்குப்  போலீசுக்கு  இல்லை   என்றும்  காலிட்  கூறினார்.