கட்சிநீக்கம் நியாயமானதே- ஜோகூர் எம்பி

johorகட்சியின்  முன்னாள்  துணைத்  தலைவர்  முகைதின் யாசினையும்  முன்னாள்  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிரையும்  விலக்கும்  கட்சி   உச்சமன்றத்தின்  முடிவை  ஏற்பதாக  ஜோகூர்  அம்னோ  அறிவித்துள்ளது.

அம்முடிவு  நியாயமானது  என  ஜோகூர்  அம்னோ  நம்புவதாக  ஜோகூர் மந்திரி  புசார்  காலிட்   நோர்டின்  தெரிவித்தார்  என  பெர்னாமா  கூறியது.

நேற்றிரவு,  அம்னோ  தலைவரும்  பிரதமருமான  நஜிப்  அப்துல்  ரசாக்,   அவ்விருவரும்  கட்சியிலிருந்து  நீக்கப்படுவதாகவும்  உதவித்  தலைவர்  முகம்மட்  ஷாபி  அப்டால்  இடைநீக்கம்  செய்யப்படுவதாகவும்  அறிவித்தார்.