இடைத் தேர்தல் தோல்விக்கு மற்றவர்கள்மீது பழி போடுவதை நிறுத்துவீர்: எதிரணியைக் கடிந்து கொண்டார் அன்வார்

blameசிறையில்   இருக்கும்   முன்னாள்  எதிரணித்  தலைவர்   அன்வார்   இப்ராகிம்,   எதிரணியினர்  சுங்கை  புசார்,  கோலா  கங்சார்  இடைத் தேர்தல்  தோல்விக்கு  ஒருவர்மீது  மற்றொருவர்  பழிபோடுவதை  முதலில்  நிறுத்த  வேண்டும்  என்று  கூறினார்.

“எதிரணி  தேர்தல்  முடிவை  அடக்கத்துடன்  ஏற்றுக்கொண்டு  அதன்  பலவீனங்களைக்  கவனமாகக்  கண்டறிய  வேண்டும்.

“சாக்குபோக்கு  சொல்லிக்  கொண்டிருக்கவும்  பழி  போடவும்  இது  நேரமல்ல”,  என்று  தம் வழக்குரைஞர்கள்  மூலமாக  வெளியிட்ட   அறிக்கையில்  அன்வார்  வலியுறுத்தினார்.