சென்னையில் கடந்த 2 நாட்களில் 161 ரவுடிகள் அதிரடியாக கைது

arrest-091சென்னையில் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த 2 நாட்களில் 161 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகரில் ரவுடிகள், கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ரவுடிகள், முக்கியமாக சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் அல்லது விளைவிக்கக்கூடும் என சந்தேகிக்கும் ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் குற்றச் சம்பவங்களை தடுக்க இரவு நேரரோந்து பணி தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன், இரவு நேர ரோந்து பணியை தாமே நேரடியாக ஆய்வு செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரயில்வே பொலிசாருக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கூலிப்படை கலாச்சாரம் குறைந்துவிட்டதாகவும், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக இயங்கும் பார்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே,ரவுடிகள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,கடந்த 2 நாட்களில் 161 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://news.lankasri.com

TAGS: