சியா விமானத்தில் தீ: யாரும் காயமடையவில்லை

siaஇன்று   அதிகாலை  மிலான்  சென்று  கொண்டிருந்த  சிங்கப்பூர்  விமான  நிறுவனத்தின்  விமானம்  ஒன்று  தீப்  பற்றிக்  கொண்டதால்  அது  மீண்டும்  சிங்கப்பூரின்  சாங்கி  விமான  நிலையத்துக்கே  திரும்பியது. விமானத்தில்  இருந்த  பயணிகள் எவரும்  காயமடைவில்லை என  விமான  நிறுவன,  விமான  நிலைய   அதிகாரிகள்  தெரிவித்தனர்.

அந்த  சியா விமானம்  அதிகாலை  மணி  2.05க்கு  சிங்கப்பூரிலிருந்து  புறப்பட்டது.  இரண்டு  மணி  நேரத்துக்குப்  பின்னர்  விமானத்தின்  இயந்திரப்  பகுதி  தீப்  பற்றிக்  கொண்டிருப்பதைக்  கண்ட  விமானி   விமானத்தைத்  திரும்பவும்   சாங்கி  விமான  நிலையத்துக்கே  கொண்டு  வந்தார். அங்கு  தீ  அணைக்கப்பட்டது.

விமானத்தில்  222  பயணிகளும்  19  பணியாளர்களும்  இருந்தனர்.  எவரும்  காயமடையவில்லை.