‘காஃபீர் ஹர்பி’ விவகாரத்தில் பகாங் சுல்தான் மெளனம் கலைய வேண்டும்

bariபகாங்  முப்தி  இஸ்லாத்தை  எதிர்க்கும்  முஸ்லிம்- அல்லாதார்  ‘காஃபீர்   ஹர்பி’  என்று  முத்திரை  குத்தியிருப்பது  குறித்து  பகாங்  சுல்தான்  கருத்துரைக்க  வேண்டும்  என  அரசமைப்பு  வல்லுனர்  அப்துல்  அசீஸ்  பாரி  வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களில்  சுல்தான்களே  இஸ்லாமிய  சமயத்  தலைவர்களுமாவர்  என்பதால்  பகாங்  முப்தி  மாநில  சுல்தானின்  அதிகாரத்துக்கு  உட்பட்டவராகிறார்.

“எனவே, இவ்விவகாரத்தில்  பகாங்  சுல்தான்  மெளனம்  கலைவது  அவசியமாகும்”, என்றாரவர்.