போலீஸ்: பயங்கரவாதிகள் என்றால் அருகில் உள்ள கேளிக்கை விடுதிகளைத் தாக்கி இருப்பார்கள், அங்கு கூட்டம் அதிகம்

bombபூச்சோங் குண்டுவெடிப்பு  பயங்கரவாதிகளின்    செயலல்ல ; அது   குண்டர் கும்பல்  சச்சரவுடன்  தொடர்புடையது என்று   போலீசார் வலியுறுத்துகிறார்கள்.

“ஐஎஸ் தீவிரவாதிகள்  தாக்குதல்   நடந்த  எண்ணியிருந்தால்   அதற்குப்   பக்கத்திலேயே    இன்னொரு கேளிக்கை விடுதி  இருக்கிறது, அப்போது அங்கு 80, 90 வாடிக்கையாளர்கள்  இருந்தனர்,  அதுதானே  அவர்களின்  இலக்காக இருந்திருக்கும்?”, என  சிலாங்கூர் போலீஸ் துணைத் தலைவர் அப்துல் ரகிம் ஜப்பார் வினவினார்.
மோவிடா கிளப்பில் இருபதுக்கு மேற்பட்டோர்  ஸ்பேய்னுக்கும் இத்தாலிக்குமிடையிலான   கால்பந்தாட்டப் போட்டியைப்  பார்த்துக் கொண்டிருந்தபோது   அக்குண்டுவெடிப்பு   நிகழ்ந்தது.

அதில் எண்மர் காயமடைந்தனர்.

அதை ஒரு குற்றச்செயல் என்று வருணித்த ரகிம், இது போன்ற குண்டர் கும்பல் தாக்குதல்கள்  முன்பும் நடந்திருப்பதாகக்  கூறினார்.

அந்த விடுதியின் உரிமையாளர் ரோஜர் ஹியு,   அங்கு தங்கள் திருமண   இரண்டாம்  ஆண்டு நிறைவைக் கொண்டாட வந்திருந்த இந்திய தம்பதிகள்தான்   தாக்குதல்காரர்களின்   இலக்கு என்பது   தொடக்கநிலை  விசாரணைகளில்  தெரிய வந்திருப்பதாகக்  கூறினார்.