அடுத்த தேர்தலுக்கு மிகப் பெரிய கூட்டணி அமைக்க பிஎஸ்எம் திட்டம்

psmஅடுத்த  பொதுத்  தேர்தலில்  போட்டியிட   தொழிற்சங்கங்கள்,  என்ஜிஓ-கள்,  பல்வேறு  சங்கங்கள்  ஆகியவற்றை  உள்ளடக்கி  ஒரு  மாபெரும்  கூட்டணி   அமைக்கலாம்  என்ற   கருத்தை பிஎஸ்எம்   மத்திய  செயல்குழு  உறுப்பினர்  எஸ்.அருட்செல்வன்   முன்வைத்திருக்கிறார்.

இல்லையேல்,   நடப்பு  நிலவரம்   தொடரும்   பட்சத்தில்   அடுத்த   தேர்தலில்  அனைவருக்கும்   தோல்வி  நிச்சயம்  என்றவர்    எச்சரித்தார்.

நேற்றிரவு  ‘அமனா: வரமா  அல்லது  சாபமா?’  என்ற  கருத்தரங்கில்  தாம்  முன்வைத்த   அக்கருத்தைப்  பற்றிக்  குறிப்பிட்டபோது   அருட்செல்வன்  இவ்வாறு  கூறினார்.

அக்கருத்தரங்கில்  அவர்  அமனா   பிரச்னை   அல்லவென்றும்   ஒட்டுமொத்த   பக்கத்தான்   ஹராபான்தான்  பிரச்னை  என்றும்   கூறினார்,