திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் நஜிப் சிலாங்கூரைத் திரும்பக் கைப்பற்றுவார்

snapதிடீர்  தேர்தல்  நடத்தப்பட்டால்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்தான்  வெற்றி  பெறுவார்,  சிலாங்கூரைக்கூட  அவர்  திரும்பக்  கைப்பற்ற  முடியும்  என்று  கூறியுள்ளார்  நஜிப்பின்  மிகப்  பெரிய  எதிரியான   டாக்டர்  மகாதிர்   முகம்மட்.

“இப்போதைக்கு  எதிரணி   சீர்குலைந்து  கிடக்கிறது.  அவர்கள்  (தேர்தலைச்  சந்திக்க)  தயாராக  இல்லை.  பிஎன்னிடம்  இருப்பதுபோன்ற   தேர்தல்  இயந்திரம்  அவர்களிடம்   இல்லை.  பிஎன்னிடம்  அரசாங்க   இயந்திரமே  உள்ளது…..”, என்றவர்  புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.