விலைமதிப்பில்லா தெய்வ சிலைகளுடன் சீன பிரஜைகள் கைது

jail prisonவிலை மதிக்க முடியாத 3 பழைமையான தெய்வ சிலைகளை சீனாவுக்கு கொண்டு செல்ல முனைந்த சீனவை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை சீனா நோக்கி புறப்பட்டுச் செல்ல தயாராக இருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிள்ளையார் சிலை மற்றும் வேறு இரண்டு சிலைகளே இவ்வாறு கடத்திச்செல்லப்படவிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் 40 வயதான ஆணொருவரும்,பெண்ணொருவரும் என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சுங்க பிரிவினரும், தொல்பொருளியல் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: