குவான் எங், பாங் லி குற்றச்சாடுகளை மறுத்து விசாரணை கோரினார்

 

guan eng tospeakபினாங்கு மாநில முதலமைச்சர் குவான் எங் மற்றும் பாங் லி கூன் ஆகிய இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் பினாங்கு ஜியோர்ஜ் டவுன் செசன்ஸ் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட பின்னர், சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்பாண்டியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி வழக்கை பினாங் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற சம்மதம் தெரிவித்தார்.

இன்று காலை மணி 11.50 அளவில் பினாங் உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய குவான் எங் மற்றும் பாங் லி ஆகிய இருவருக்கும் எதிரான வழக்கில் இருவரும் குற்றச்சாட்டுகளை மறுத்த விசாரணை கோரினர்.

வழக்கை செவிமடுத்த நீதிபதி அஸ்மி அரிப்பின் வழக்கு தொடர்பானவற்றை நிர்ணயிக்க செப்டெம்பர் 22 ஐ அறிவித்தார்.

குவான் எங்கிற்கு ரிம1 மில்லியன் பிணையுடன் ஒரு நபர் ஜாமின் விதிக்கப்பட்டது.

பான்கிற்கு ரிம200,000 பிணையுடன் ஒரு நபர் ஜாமின் விதிக்கப்பட்டது.

இத்துடன் நீதிமன்றம் கலைந்தது. குவான் எங் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசவிருக்கிறார்.