எம்டியுசி: விமான நிறுவனம் ராயாவுக்கு முன்பே பணியாளர்களின் சம்பளப் பாக்கியைக் கொடுக்க வேண்டும்

mtucமலேசிய  தொழிற்சங்கக்  காங்கிரஸ் (எம்டியுசி), ஒரு  விமான  நிறுவனம்  அதன்  பணியாளர்களுக்குக்  கொடுக்க  வேண்டிய  சம்பளப் பாக்கியை  ஹரி  ராயாவுக்கு  முன்பே  கொடுத்தாக  வேண்டும்  என்று  கோரிக்கை  விடுத்துள்ளது.

சுமார்  300  பணியாளர்கள்  கடந்த  மூன்று  மாதங்களாக  தங்களுக்கான  சம்பளமும்  ஆறு  மாதங்களாக   அலவன்சுகளும்  கொடுக்கப்படாமல்  இருப்பதாகக்  கூறினார்கள்.

அது  மட்டுமல்ல.  தங்கள்  சம்பளத்தில்   ஊழியர்  சேமநிதி(இபிஎப்)க்கும்    சமூகப்  பாதுகாப்பு   நிறுவனத்துக்கும்(சொக்சோ)  சந்தா பணம்   பிடித்தம்  செய்யப்பட்டதாகவும்  ஆனால்  கடந்த  ஆண்டிலிருந்து  அவை  இபிஎப்-புக்கோ  சொக்சோவுக்கோ  அனுப்பப்படவில்லை  என்றும்  அவர்கள்  தெரிவித்தனர்.

“இது நம்பிக்கை  மோசடியையும்  பொறுப்பின்மையையும்  காட்டுகிறது”, என  எம்டியுசி  தலைவர்  அப்துல்லா  சனி   அப்துல்  ஹமிட்  இன்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கூறினார்.