பினாங் டிஎபி: குவான் எங் பதவி துறக்க வேண்டியதில்லை

kuannoneedtoresignபினாங் முதலமைச்சர் குவான் எங் பதவி துறக்கவோ விடுமுறையில் செல்லவோ வேண்டியதில்லை என்று பினாங் மாநில டிஎபி இன்று முடிவெடுத்துள்ளது.

இன்று காலையில் குவாங் எங் மீது நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாடு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குவான் எங்கிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை. அதன் காரணமாக அவர் பதவி துறக்க வேண்டியதில்லை என்று டிஎபி மாநில குழு இன்று நடத்திய அதன் அவசரக் கூட்டத்தில் இம்முடிவை எடுத்தது.

தாம் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது விடுமுறையில் செல்ல வேண்டும் என்பது பற்றிய முடிவு எடுப்பதை கட்சியிடம் விட்டுவிடுவதாக குவான் எங் முன்னதாக கூறியிருந்தார்.