சீனர்களிடையே மதிப்பைக் கூட்டிக்கொள்ள அஸ்மின் அதிகம் செய்ய முடியும்

azmசிலாங்கூர்   மந்திரி புசார்  அஸ்மின்  அலியின்  அடைவுநிலைமீது  மெர்டேகா  மையம்  நடத்திய  ஆய்வில்  மந்திரி  புசார்  நன்றாகவே  செயல் படுகிறார்  என்று  பெரும்பாலோர்  கருத்துத்  தெரிவித்திருந்தாலும்  மலாய்,  இந்திய  வாக்காளர்களுடன்  ஒப்பிடுகையில்  சீனர்களில்  54  விழுக்காட்டினர்  மட்டுமே   அவர்மீது திருப்தி  கொண்டிருப்பது  தெரிய  வந்துள்ளது.

ஆனாலும்,  சீனர்களில்  54  விழுக்காட்டினர்  அஸ்மின்மீது  திருப்தி  கொண்டிருப்பது  “அப்படி  ஒன்றும்  மோசமில்லை” என்று  கம்போங்  துங்கு  சட்டமன்ற  உறுப்பினர்  லாவ்  வெங்  சான்  கூறினார்.

“சீனர்களின்  ஆதரவு (மலாய்க்காரர்களுடனும்  இந்தியர்களுடனும் ஒப்பிடும்போது)  10 விழுக்காடுதான்  குறைந்துள்ளது. இதை  நினைத்துக்  கலக்கமடைய  தேவவையில்லை.

“ஆனால், அவர் (அஸ்மின்) அவரது  மதிப்பைக்  கூட்டிக்கொள்ள  கூடுதலாக  வேலை   செய்ய  வேண்டும்”, என்பதை  லாவ்  ஒப்புக்கொண்டார்.

இந்த  ஆய்வு   அவர் (அஸ்மின்)  “மேலும்  கடுமையாக  பாடுபட”  ஓர்  ஊக்குவிப்பாக  அமைய  வேண்டும்  என்றாரவர்.