1எம்டிபி பணம் கையாடப்பட்டதற்கு ஆதாரம் ஏதுமில்லை- ஏஜி

ag1எம்டிபி- இலிருந்து   பணம்  கையாடப்பட்டதற்கு   தற்போதைக்கு   ஆதாரம்   ஏதும்  இல்லை    எனச்   சட்டத்துறைத்   தலைவர் (ஏஜி)  முகம்மட்   அபாண்டி  அலி   கூறினார்.

“பல்வேறு   அமலாக்க    நிறுவனங்களும்   மேற்கொண்ட   விசாரணைகளில்     1எம்டிபி-இல்     பணம்    கையாடப்பட்டதற்கு   இதுவரை     ஆதாரம்   எதுவும்  கிடைக்கவில்லை”,  என  அபாண்டி   இன்று  ஓர்    அறிக்கையில்   தெரிவித்தார்.

அபாண்டி  உள்நாட்டு  அமலாக்க   நிறுவனங்கள்   பற்றிக்  குறிப்பிடுகிறாரா   அல்லது    வெளிநாட்டு   நிறுவனங்களைக்   குறிப்பிடுகிறாரா   என்று   தெரியவில்லை.

“1எம்டிபி -இல்  பணம்  கையாடப்பட்டதன்   தொடர்பில்    தனிப்பட்ட   நபர்களுக்கு    எதிராக   கிரிமினல்    குற்றச்சாட்டு    எதுவும்   இல்லை”  என்பதையும்   ஏஜி   சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க  நீதித்துறை    1எம்டிபி   பணம்  கையாடப்பட்டதாகக்  கூறி   அதற்கு   எதிராக   சிவில்    வழக்கு    தொடர்ந்திருப்பது   பற்றிக்   கருத்துரைத்தபோது   அபாண்டி   இவ்வாறு   கூறினார்.