பிரதமர்: 1எம்டிபி சமூக நலத் திட்டங்களுக்கு நிறைய உதவியுள்ளது

najபல   குறைகூறல்களுக்கு  இலக்காகியுள்ள   1எம்டிபி   சமூக   நலத்   திட்டங்களுக்கு    நிறைய  உதவி   இருப்பதைப்     பிரதமர்  நஜிப்   அப்துல்  ரசாக்    சுட்டிக்காட்டினார்.

1எம்டிபி    அதன்    நன்கொடை   வாரியமான   1எம்டிபி   அறக்கட்டளை   மூலம்    வெள்ளத்   துயர்   துடைப்புப்   பணிகளுக்கும்     சேதமடைந்த   வீடுகளைப்  பழுதுபார்க்கவும்      மீனவர்களுக்கு    உதவவும்    மில்லியன்  கணக்கில்    செலவிட்டிருக்கிறது    என்று   நஜிப்   கூறினார்.

இவ்வாண்டு   எம்டிபி    ரிம10.4 மில்லியன்    செலவில்    1,100   பேர்  ஹஜ்ஜு  யாத்திரை    மேற்கொள்வதற்கு  ஏற்பாடு    செய்துள்ளது   என்றாரவர்.  1எம்டிபி  ஏற்பாட்டில்   யாத்திரை   செல்பவர்கள்   அதற்கான   கடிதங்களைப்  பெற      புத்ரா  ஜெயா   பள்ளிவாசலுக்கு    வந்திருந்தனர்.

“இன்று   1எம்டிபிக்கு   எதிராக   அடிக்கடி  கண்டனம்   தெரிவிக்கப்படுகிறது.  ஆனால்,  பலர்   1எம்டிபி   பல   சமூக    நலத்   திட்டங்களைக்  கொண்டிருப்பதை   மறந்து   விட்டார்கள்.

“இன்றைய   இந்த  நிகழ்வுகூட    அவற்றில்   ஒன்றுதான்”,  என்றாரவர்.