பல குறைகூறல்களுக்கு இலக்காகியுள்ள 1எம்டிபி சமூக நலத் திட்டங்களுக்கு நிறைய உதவி இருப்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சுட்டிக்காட்டினார்.
1எம்டிபி அதன் நன்கொடை வாரியமான 1எம்டிபி அறக்கட்டளை மூலம் வெள்ளத் துயர் துடைப்புப் பணிகளுக்கும் சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்க்கவும் மீனவர்களுக்கு உதவவும் மில்லியன் கணக்கில் செலவிட்டிருக்கிறது என்று நஜிப் கூறினார்.
இவ்வாண்டு எம்டிபி ரிம10.4 மில்லியன் செலவில் 1,100 பேர் ஹஜ்ஜு யாத்திரை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது என்றாரவர். 1எம்டிபி ஏற்பாட்டில் யாத்திரை செல்பவர்கள் அதற்கான கடிதங்களைப் பெற புத்ரா ஜெயா பள்ளிவாசலுக்கு வந்திருந்தனர்.
“இன்று 1எம்டிபிக்கு எதிராக அடிக்கடி கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், பலர் 1எம்டிபி பல சமூக நலத் திட்டங்களைக் கொண்டிருப்பதை மறந்து விட்டார்கள்.
“இன்றைய இந்த நிகழ்வுகூட அவற்றில் ஒன்றுதான்”, என்றாரவர்.
கொள்ளை அடித்ததில் சில எலும்பு துண்டுகள் சில நாய்களுக்கு. வேறு என்ன?
ஆமாம்! குற்றச் சாட்டுக்கள் வைக்கப்படட பின்னர் நிறைய உதவியுள்ளதா அல்லது அதற்கு முன்னேரே நிறைய உதவி உள்ளதா? அதையும் சொல்லிவிடுங்கள்! அப்பத்தான் கொஞ்சம் மனசு நிம்மதியடையும்!
DOJ “1MDB கையாடப்பட்ட பணத்தில்” வாங்கப்பட்ட சொத்துக்கள்” என்றுதான் கூறியது ஆனால் நமது பிரதமரோ சமூக நலத் திட்டம், வெள்ள துயர் துடைப்பு, ஹஜ்ஜு யாத்திரை என்று பட்டியலை விரிவு படுத்துகிறார்.
மொடடையான் கணக்கு.
இதற்கு அரசாங்க கணக்காயர் (ஆடிட்டர்) பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறார்
மொத்த அரசியல்வாதிகளும் நஜிப் நடத்தும் நாடகத்தில் நடிப்பவர்கள் தானே …
ஆடிட்டர் மட்டும் விதி விலக்கா என்னே …
தனக்கு சாதகமில்லாதவர்களே விரட்டி அடிக்கும் அரசாங்கமே நஜிப்பின் கையில் உள்ளவரை 1MDB க்கு விடிவு பிறக்காது …
கற்றதினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாரினிலே….1 எம் டி பினால் பணம் பலகோடி பெற்றோர் உண்டு பிரதமரின் அமைச்சுனிலே ..
1MDB – ல் மன்னர் மன்னர்களெல்லாம் சம்பந்தமாம்! உண்மை வெளி வந்தால் மலேசியாவின் பெயர் நல்லா விளங்கிடும்.