பிரதமர்: உண்மை இறுதியில் வெளிவரும்

najபிரதமர்     நஜிப்    அப்துல்    சராக்,   1எம்டிபி  தொடர்பில்   அமெரிக்க  நீதித்துறை   தொடுத்துள்ள  சிவில்   வழக்குகள்   குறித்து   மக்கள்  மனம்போன   போக்கில்   பேசிக்   கொண்டிருக்கக்   கூடாது   என   மீண்டும்   வலியுறுத்தினார்.

அதை   அரசாங்கம்   கடுமையான   விவகாரமாகக்     கருதுகிறது  என்று  கூறிய   பிரதமர்    அவ்வழக்கில்    பெயர்   குறிப்பிடப்பட்டவர்கள்    தாங்கள்  குற்றமற்றவர்கள்   என்பதை   நிரூபிக்க   வேண்டும்   என்றார்.

அதற்கிடையில்,    மக்கள்   மனம்போன   போக்கில்   பேசிக்   கொண்டிருக்கக்   கூடாது .

“விரைவில்   அல்லது   காலம்   தாழ்த்தி   உண்மை   தெரிய  வரும்.

“சட்டம்  அதன்  வேலையைச்  செய்ய  நாம்   இடமளிக்க   வேண்டும்.  இதுதான்  அரசாங்கத்தின்  நிலைப்பாடு. நாங்கள்  முழு  ஒத்துழைப்பு   கொடுப்போம்”.  புத்ரா  ஜெயா,   துங்கு    மிசான்    சைனல்   அபிடின்   பள்ளிவாசலில்     ஹஜ்ஜு   யாத்திரை   செல்லவிருக்கும்   சுமார்  ஆயிரம்  பேர்   கலந்துகொண்ட   கூட்டத்தில்   நஜிப்   இவ்வாறு  கூறினார்.