சிலாங்கூரில் திடீர் தேர்தல் இல்லை: அஸ்மின் திட்டவட்டம்

azminசிலாங்கூர்   சட்டமன்றம்  கலைக்கப்பட்டு    திடீர்    தேர்தல்   நடத்தப்படலாம்    என்று   கூறப்படுவதை    மந்திரி   புசார்   அஸ்மின்   அலி  மறுத்தார்.

“சிலாங்கூரில்   திடீர்  தேர்தல்   நடத்தப்படாது”,  என்றவர்   திட்டவட்டமாக    அறிவித்தார்.

“அதைப்  பற்றி   நாங்கள்  பேசவே  இல்லை”,  என  தாமான்   மெலாவாத்தியில்    செய்தியாளர்களிடம்    அஸ்மின்    தெரிவித்தார்.

பக்கத்தான்   ஹராபானின்  மூன்று  பங்காளிக்   கட்சிகளும்   சிலாங்கூரிலும்   பினாங்கிலும்   திடீர்   தேர்தலை   நடத்த   ஒப்புக்கொண்டிருப்பதாக   சீன  நாளேடா   நன்யாங்   சியாங்   பாவ்   கூறியிருப்பது    குறித்துக்   கருத்துரைத்தபோது   அஸ்மி   அவ்வாறு   சொன்னார்.